E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2183/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2183/ ’11

      கௌரவ ரவி  கருணாநாயக்க,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      காணி, காணி அபிவிருத்தி அமைச்சின்  காணி உரித்துரிமையளிக்கும் பிரிவு தற்போதைய உரித்துப் பதிவுச் சட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதை இனங்கண்டுள்ளது என்பதையும்;

      (ii) இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் மேற்படி சட்டத்தை திருத்துவதற்கான பரிந்துரை  செய்துள்ளது  என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி (அ)(i) மற்றும் (ஆ)(ii) இன் பிரகாரம் உரித்துப் பதிவுச் சட்டத்தில் இனங்காணப்பட்ட குறைபாடுகளையும் பிரேரிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளையும்     வெவ்வேறாக அவர் கூறுவாரா?

      (இ) பாராளுமன்றத்தின் மூலமாக அவ்வாறான திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (ஈ) (i) இச்சட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தும், காணி, காணி அபிவிருத்தி அமைச்சு  1998ஆம் ஆண்டின்  21ஆம்   இலக்க உரித்துப்  பதிவுச் சட்டத்தை   முனைப்பாக  நடைமுறைப்படுத்தி   வருகின்றது    என்பதையும்;

      (ii) இனங்காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தாமல் 105 புதிய பிரிவுகளை மேற்படி சட்டத்தில் கூட்டிணைப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு முயற்சிக்கின்றது  என்பதையும்;

      அவர்  ஏற்றுக்கொள்வாரா?

      (உ)  இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-08-24

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-02-08

பதில் அளித்தார்

கௌரவ ஜனக பண்டார தென்னகோன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks