E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1812/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. 1812/2023

      கௌரவ அஜித் மான்னப்பெரும,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின், றம்புக்கனை தொடக்கம் கலகெதர வரையான 20 கி.மீ தூரம் கொண்ட பகுதியை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) அதற்கென கேள்விப் பத்திரங்களைச் சமர்ப்பித்த உள்நாட்டுக் கம்பெனிகளின் எண்ணிக்கை, அத்தகைய கம்பெனி ஒவ்வொன்றினதும் பெயர் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமனுக்கள் தனித் தனியாக யாவை என்பதையும்;

      (iii) கேள்விப் பத்திரங்களைச் சமர்ப்பித்த வெளிநாட்டுக் கம்பெனிகளின் எண்ணிக்கை, அத்தகைய கம்பெனி ஒவ்வொன்றினதும் பெயர் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமனுக்கள் தனித் தனியாக யாவை என்பதையும்;

      (iv) இந்தக் கேள்விப் பத்திர நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-23

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-05-23

பதில் அளித்தார்

கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks