E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2277/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2277/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,— சமூக சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கையில் உள்ள எவ்விதமான வருமானத்துக்கும் உரிமைகோராத, ஊனமுற்ற நபர்கள் மற்றும்           வயோதிபர்களைக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை           அண்ணளவாக  எவ்வளவென்பதையும்;

      (ii) 2005 மஹிந்த சிந்தனை கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”எவ்வித வருமானத்துக்கும் உரிமைகோராத ஊனமுற்றவர்களைக்கொண்ட  குடும்பமொன்றுக்கு மாதந்தம் ரூ. 3,000 பெற்றுக்கொடுப்பேன்” எனும் வாக்குறுதியின் படி தற்போது மேற்படி பணம் வழங்கப்படுகின்றதா என்பதையும்;

      (iii) ஆமெனில்,மேற்படி பிரதிபலனைப் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) 2005 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை மேற்படி பணத்தை வழங்குவதற்காக  செலவிடப்பட்டுள்ள தொகை வெவ்வேறாக யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) மேற்படி (அ) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதி தற்போது நிறைவேற்றப் படுவதில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-28

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

சமூக சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-02-08

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ பீலிக்ஸ் பெரேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks