E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2693/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

    1. 2693/2023

      கௌரவ கே.பீ.எஸ். குமாரசிறி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஹோமியோபதி மருத்துவ முறையானது பக்கவிளைவுகள் அற்ற, பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருத்துவ முறையாக இலங்கையில் பிரசித்தி பெற்றுள்ளது என்பதையும்;

      (ii) இத்தகைய மருத்துவ சிகிச்சைகளை அளித்துவருகின்ற சிறந்த ஹோமியோபதி வைத்தியர்கள் பலவருட காலமாக பதிவுசெய்யப்படாது உள்ளனர் என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) தம்மை பதிவு செய்துகொள்வதற்காக பல வருடங்களாக காத்திருக்கும் ஹோமியோபதி வைத்தியர்களைப் பதிவுசெய்ய தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது என்பதையும்;

      (ii) செய்முறைப் பரீட்சை ஒன்றினூடாக அந்த வைத்தியர்களின் புலமையைப் பரிசீலித்து இவர்களைப் பதிவுசெய்ய முடியுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) ஹோமியோபதி மருத்துவ முறையை முன்னேற்றுவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (ii) ஹோமியோபதி சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்ய முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படுமா என்பதையும்;

      (iii) ஹோமியோபதி பல்கலைக்கழகத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-25

கேட்டவர்

கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks