E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3318/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான, பா.உ.

    1. 3318/2023

      கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் தற்பொழுது அதிகளவில் வாகன விபத்துகள் இடம்பெற்று வருகின்றன என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) கொழும்பு-கண்டி பிரதான வீதியின் இந்திகஹமுல சந்திக்கு அருகாமையில் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் அவ்விபத்துகளின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பன ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் தனித்தனியே யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) வேபொட பகுதியிலிருந்து கொழும்பு–கண்டி பிரதான வீதியை அடைவதற்கான நுழைவு வீதியொன்று இருக்கின்றது என்பதையும்;

      (ii) வேபொட வீதியிலிருந்து பிரதான வீதிக்குப் பிரவேசிக்கும் வாகனங்கள் கண்டி அல்லது கொழும்பு ஆகிய திசைகளை நோக்கிப் பயணிக்கின்றன என்பதையும்;

      (iii) அவ்விடத்தில் உள்ள பாதசாரிகள் கடவையில் அதிகளவான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்பதையும்;

      (iv) மேற்படி பாதசாரி கடவையும் நுழைவு வீதியும் ஒரே இடத்தில் அமைந்துள்ளமையே இதற்கான காரணம் என்பதையும்;

      (v) பல வருடங்களாக இது தொடர்பில் விழிப்புணர்வூட்டப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (இ) மேற்குறிப்பிட்ட இடத்தில் இடம்பெறும் வாகன விபத்துகளைத் தவிர்த்து, உயிர்ச் சேதங்களையும் சொத்துக்களுக்கான சேதங்களையும் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-23

கேட்டவர்

கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks