E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0007/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 7/2024

      கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ருஹுணு சுற்றுலாப் பணியகத்தால் மதுனாகல சுற்றுலாக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

      (ii) இதன் கீழ் மதுனாகல வெந்நீர் ஊற்றைப் பயன்படுத்தி இதயத் தசை பிடித்துவிடுதல் (இதய புத்துயிரூட்டல்) நிலையமொன்றை அமைப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திற்கு செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் இதுவரை நிறைவுசெய்யப்படவில்லை என்பதால் அந்நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் மதுனாகல சுற்றுலா வலயத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ள சிற்றுண்டிச்சாலை, ஓய்வறை மற்றும் உணவகம் போன்றவற்றுக்காகச் செலவிடப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (ii) அதிகளவான பணத்தொகையைச் செலவிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதியிலுள்ள மின் பிறப்பாக்கி செயலிழந்து காணப்படுவதுடன், விடுதியின் கூரையும் பழுதடைந்த நிலையில் இருப்பதை அறிவாரா என்பதையும்;

      (iii) அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிராமியக் கடைவீதிக்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

      (iv) தற்போது மேற்படி கடைவீதி சிதைவடைந்த நிலைக்கு உள்ளாகியுள்ளதை அறிவாரா என்பதையும்;

      (v) மேற்படி கருத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-05

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks