பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
68/2024
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் மட்டக்களப்பு, மண்முனை - மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வவுணதீவு பிரதேசத்தில் 50இற்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டமொன்று நிர்மாணிக்கப்பட்டதென்பதையும்;
(ii) அவ்வீட்டுத்தொகுதியிலுள்ள சில வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும், மேலும் சில வீடுகளின் நிர்மாணப் பணிகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என்பதையும்;
(iii) அதன்பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அவ்வீடுகளைப் புனரமைத்து மக்களிடம் கையளிக்கவில்லை என்பதையும்;
(iv) அதன் காரணமாக 8 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஆமெனில், மேற்படி வீட்டுத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) எக்காலப்பகுதியில் அவ்வீட்டுத்திட்டம் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-22
கேட்டவர்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks