E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0070/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

    1. 70/2024

      கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1982 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் – பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுவன்கேணி – 2 பிரதேசத்தில் சீனோர் வீடமைப்புத் திட்டம் என்ற பெயரில் வீடமைப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதை அறிவாரா;

      (ii) மேற்படி வீடுகள்/காணிகளுக்கான உரித்து உறுதிகள் இதுவரை வழங்கப்படாததால், அவற்றில் வசிப்பவர்கள் அந்த வீடுகள்/காணிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதையும் அறிவாரா;

      (iii) ஆமெனில், அந்த வீடுகள்/காணிகளுக்கு உரித்து உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (iv) எக்காலப்பகுதியில் அந்த உறுதிகள் வழங்கப்படும் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-24

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks