E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0103/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 103/2024

      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆந் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றர்களின் அளவு மற்றும் மசகெண்ணெய் பீப்பாய்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு வகையைச் சார்ந்த எரிபொருள் லீற்றருக்கும் அரசாங்கம் விதித்துள்ள வரித் தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு வகையைச் சார்ந்த எரிபொருளிலுமிருந்து அரசாங்கம் அறவிட்டுள்ள மொத்த வரித் தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iv) மேற்படி எரிபொருள் வகைகளுக்காக செலுத்தப்பட்டுள்ள தரையிறக்கும் கட்டணம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-23

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks