E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0104/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 104/2024

      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2023 நவெம்பர் 14 தொடக்கம் 2024 நவெம்பர் 13 வரையிலான காலப்பகுதியினுள் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி காலப்பகுதியினுள் அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iii) 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட மேற்படி அரிசியின் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (v) அரிசி இறக்குமதி செய்வதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (vi) மேற்படி ஒரு கிலோ அரிசியின் இறக்குமதி விலை யாதென்பதையும்;

      (vii) மேற்படி அரிசி சந்தைக்கு வழங்கப்படும் விலை யாதென்பதையும்;

      (viii) மேற்படி அரிசி வாடிக்கையாளருக்கு விற்கப்படும் விலை யாதென்பதையும்;

      (ix) மேற்படி அரிசிக்கு அரசாங்கம் விதிக்கும் வரி எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-06

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks