E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0154/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

    1. 154/2024

      கௌரவ அஜித் பி. பெரேரா,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மன்னாரில் நிறுவப்பட்டுள்ள ''தம்பபவனீ'' காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) மேற்படி நிர்மாணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்தின் கொள்ளளவு (Installed Capacity) யாதென்பதையும்;

      (iv) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்தில் மின்சார அலகு ஒன்றை உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் பணத்தொகை யாதென்பதையும்;

      (v) 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டுவரை மேற்படி மின்னுற்பத்தி நிலையம் மூலமாக தேசிய மின் கட்டமைப்புக்குச் சேர்க்கப்பட்டுள்ள வலு சக்தியின் அளவு ஒவ்வோர் ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி மின்னுற்பத்தி நிலையம் காரணமாக இடம்பெயரும் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (ii) அந்த நடவடிக்கைள் எவ்வாறு வெற்றியளித்துள்ளன என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மன்னார் தீவில் மேலும் காற்றாளை மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான சாத்தியம் உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களின் கொள்ளளவு யாதென்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-07

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks