E   |   සි   |  

 திகதி: 2025-01-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0174/ 2025 - கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 174/2024

      கௌரவ ரவி கருணாநாயக்க,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் கடந்த 5 வருடங்களாக அரச துறையிலும் தனியார் துறையிலும் உள்ள ஊழியப் படையை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) கடந்த 10 வருடங்களில் அரச துறையின் நிரந்தர மற்றும் அமைய ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) கடந்த 10 வருடங்களில் அரச துறையின் ஊழியர்களின் சம்பளங்கள் மற்றும் ஊதியங்களின் மொத்த நிதிச் செலவு யாதென்பதையும்;

      (iv) கடந்த 10 வருடங்களில் செலுத்தப்பட்ட ஓய்வூதியத் தொகையின் மொத்தத் தொகை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு வருடாந்த அடிப்படையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கையில் அடுத்த 10 வருடங்களுக்கு அரச துறையினதும் தனியார் துறையினதும் ஊழியப் படையின் முன்கணிப்பு வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (ii) அடுத்த 5 வருடங்களில் பணிக்கு உள்வாங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) அடுத்த 10 வருடங்களுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஓய்வூதியச் செலவுத் தொகை யாதென்பதையும்;

      (iv) அடுத்த 10 வருடங்களுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு வருடாந்த அடிப்படையில் மேலும் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-09

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-01-09

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த ஜயசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks