பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
291/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "கொவிட் – 19" பெருந்தொற்றினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்ட மட்டக்களப்பு "மஜ்மா நகர்" மயானமானது இடுகாடுகள், சுடுகாடுகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உரித்தாகும் உள்ளூராட்சி நிறுவனம் யாது;
(ii) மேற்குறிப்பிட்ட மயானத்தின் பரப்பளவு யாது;
(iii) மேற்குறிப்பிட்ட காணி அரசாங்கத்துக்கு உரித்தானதா;
(iv) ஆமெனில், மேற்படி காணி சட்டரீதியாக சுவீகரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சமர்ப்பிப்பாரா?
(v) மேற்படி சுவீகரிப்புக்கான நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி மயானத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள நிதித்தொகை மற்றும் தனிப்பட்ட தரப்பினர்களிடமிருந்து நன்கொடையாகக் கிடைக்கப்பெற்றுள்ள நிதித்தொகை வெவ்வேறாக யாது;
(ii) மேற்படி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தனியார் தரப்பினரால் வழங்கப் பட்டுள்ள இயந்திரசாதனங்கள் உள்ளிட்ட ஏனைய சொத்துக்கள் யாவை?
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-02-27
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks