E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0291/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

    1. 291/2024

      கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) "கொவிட் – 19" பெருந்தொற்றினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்ட மட்டக்களப்பு "மஜ்மா நகர்" மயானமானது இடுகாடுகள், சுடுகாடுகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உரித்தாகும் உள்ளூராட்சி நிறுவனம் யாது;

      (ii) மேற்குறிப்பிட்ட மயானத்தின் பரப்பளவு யாது;

      (iii) மேற்குறிப்பிட்ட காணி அரசாங்கத்துக்கு உரித்தானதா;

      (iv) ஆமெனில், மேற்படி காணி சட்டரீதியாக சுவீகரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சமர்ப்பிப்பாரா?

      (v) மேற்படி சுவீகரிப்புக்கான நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளதா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி மயானத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள நிதித்தொகை மற்றும் தனிப்பட்ட தரப்பினர்களிடமிருந்து நன்கொடையாகக் கிடைக்கப்பெற்றுள்ள நிதித்தொகை வெவ்வேறாக யாது;

      (ii) மேற்படி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தனியார் தரப்பினரால் வழங்கப் பட்டுள்ள இயந்திரசாதனங்கள் உள்ளிட்ட ஏனைய சொத்துக்கள் யாவை?

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-27

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks