E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0297/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

    1. 297/2024

      கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் திரு. அனில் ஜாசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

      (ii) அவர் தொடர்பாக அரசாங்க கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் கணக்காய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

      (iii) திரு. ஜாசிங்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படும் தருணத்தில் மேற்குறிப்பிடப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசாரணை நிறைவடைந்திருந்ததா;

      (iv) மேற்படி விசாரணையில் திரு. ஜாசிங்க நிரபராதியாக காணப்பட்டுள்ளாரா;

      (v) திரு. ஜாசிங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகையில் ரூ. 29 இலட்சம் தொடர்பாக கணக்காய்வு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்வாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-06

கேட்டவர்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks