E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0316/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

    1. 316/2024

      கௌரவ தேவானந்த சுரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—-

      (அ) (i) மனுதாரர் திரு. முதுதந்திரிகே நிலங்க தில்சான் குறே மற்றும் இதர நான்கு மனுதாரர்களால் சுகாதார அமைச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த SC FR 55/2019 ஆம் இலக்கமுடைய 2019 பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிய வழக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் முன்னிலையில் மத்தியஸ்தம் செய்யப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி மத்தியஸ்தத்தின்படி, 01 ஆம் மனுதாரர் ஆயுர்வேத கல்விசார் கற்கைநெறியைத் தொடர்வதற்கு 2019 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதையும்;

      (iii) இலக்கம் 2 தொடக்கம் 5 வரையான மனுதாரர்கள் அவர்களது பரீட்சைகளை நடாத்தி முடித்துள்ளனரா என்பதையும்;

      (iv) ஆயுர்வேத கல்விசார் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு ஆயுர்வேத திணைக்களத்தால் இன்றளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-21

கேட்டவர்

கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks