E   |   සි   |  

 திகதி: 2025-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0328/ 2025 - கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 328/2024
      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) பாதுகாப்பு அமைச்சுக்கென இன்றளவில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (ii) அந்த ஆலோசகர்களின் பணிப்பொறுப்புகள் யாவை என்பதையும்;
      (iii) அத்தகைய ஒவ்வோர் ஆலோசகருக்கும் செலுத்தப்படுகின்ற மாதாந்தச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், முந்தைய சேவை நிலையம்/ நிலையங்கள், இறுதியாக வகித்துள்ள பதவி, கல்வித் தகைமைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டளவில் வயது வெவ்வேறாக யாவையென்பதையும்;
      (iv) அத்தகைய ஆலோசகர்களுக்கென பணியாட்டொகுதியொன்று வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
      (v) ஆமெனில், அத்தகைய ஆலோசகர் ஒவ்வொருவரினதும் பணியாட்டொகுதியில் உள்ள பணியாளர்களின் பெயர்கள், அவர்களின் பதவிகள், அவர்களின் மாதாந்தச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அத்துடன் அப்பணியாளர்கள் இணைக்கப்பட்டிருப்பின், அவர்களின் முந்தைய சேவை நிலையங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks