E   |   සි   |  

 திகதி: 2025-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0341/ 2025 - கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 341/2024
      கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில் கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் சுமார் 478 சிறு குளங்கள் காணப்படுகின்றன என்பதையும்;
      (ii) மேற்படி குளங்களுள், 200 இற்கும் குறைவான குளங்கள் மட்டுமே பராமரிக்கப்படுவதுடன் எஞ்சிய குளங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுதில்லை என்பதையும்;
      (iii) மேற்படி குளங்களை புனரமைத்து பராமரிப்பதாயின், பிரதேசத்திலுள்ள விவசாயிகளை வலுப்படுத்த முடியுமென்பதையும்;
      அவர் ஏற்றுக்கொள்வாரா?
      (ஆ) ஆமெனில், பராமரிக்கப்படாத மேற்குறிப்பிட்ட குளங்களை உரிய முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks