E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0379/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

    1. 379/2025

      கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் பணியாற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு சிறைச்சாலை வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) அத்தகைய சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளில் தற்போது காணப்படுகின்ற குறைபாடுகள் யாவையென்பதையும்;

      (iii) சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்படும் நபர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வளிப்பு நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அத்தகைய புனர்வாழ்வளிப்பு நிலையங்களில் தற்போது புனர்வாழ்வளிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிலையம் வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும்போது பின்பற்றப்படும் வழிமுறைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-20

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks