E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0385/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வருண லியனகே, பா.உ.

    1. 385/2025

      கௌரவ வருண லியனகே,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேச செயலகப் பிரிவுகளில் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது என்பதையும்;

      (ii) இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமங்களையும் சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொண்டுள்ளனர் என்பதையும்;

      (iii) முறையான நீர் வழங்கலுக்கான வழிமுறைகள் இன்மையால் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இந்த நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வாக நடைமுறைப்படுத்தப்பட்ட "விசல் இரத்தினபுரி நீர் வழங்கல் திட்டத்தின்" 2ஆம் கட்டப் பணிகள் எந்தளவில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன என்பதையும்;

      (ii) இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதன் பின்னர், அதற்குள் அடங்காத பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு புதிய நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (iii) இரத்தினபுரி மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமுதாய நீர் வழங்கல் திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) புதிய சமுதாய நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-01

கேட்டவர்

கௌரவ வருண லியனகே, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks