E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0392/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

    1. 392/2025

      கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஊவா மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாகாண இறைவரி ஆணையாளர் நியமிக்கப்பட்ட செயன்முறை யாதென்பதையும்;

      (ii) மாகாண இறைவரி ஆணையாளர் பதவிக்கான தகைமைகள் யாவை என்பதையும்;

      (iii) புதிய மாகாண இறைவரி ஆணையாளரை நியமிப்பதற்கு முன்னர் பணியாற்றிய மாகாண இறைவரி ஆணையாளர், உள்நாட்டு இறைவரி உத்தியோகத்தர் சேவையைச் சேர்ந்தவரா என்பதையும்;

      (iv) மாகாண இறைவரி ஆணையாளர் உள்நாட்டு இறைவரி சேவையிலிருந்தா, மாகாண இறைவரி சேவையிலிருந்தா அல்லது கணக்காளர் சேவையிலிருந்தா நியமிக்கப்படுகின்றனர் என்பதையும்;

      (v) ஊவா மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாகாண இறைவரி ஆணையாளர், இதற்கு முன்னர் ஊவா மாகாணத்தின் மாகாண இறைவரி ஆணையாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டவரா என்பதையும்;

      (vi) ஆமெனில், மேற்படி உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ள அடிப்படை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-12

கேட்டவர்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks