E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0417/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அருண பனாகொட, பா.உ.

    1. 417/2025

      கௌரவ அருண பனாகொட,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு, மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஹோமாகம, மத்தேகொட வீடமைப்புக் கட்டிடத் தொகுதியின் மலக்கழிவு அகற்றும் முறைமை பல வருடங்களாக செயலிழந்துள்ளது என்பதையும்;

      (ii) தற்போது மேற்படி மலக்கழிவு அகற்றும் முறைமையைச் சுற்றி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேலியொன்றை நிர்மாணித்து வருகின்றது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி வேலியை நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (ii) அதன் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த திகதி மற்றும் நிறைவு செய்ய வேண்டிய திகதி என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) அதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் யாதென்பதையும்;

      (iv) மேற்படி ஒப்பந்த நிறுவனத்தை தெரிவு செய்யும்போது, உரிய கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) மேற்படி வேலியை நிர்மாணிப்பதால் பொதுமக்கள் சுமார் 40 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்ற வீதிக்கு அது முழுமையாக இடையூராக உள்ளதை அறிவாரா என்பதையும்;

      (vi) ஆமெனில், மேற்படி நிலைமையைச் சீர்செய்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-21

கேட்டவர்

கௌரவ அருண பனாகொட, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks