பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
418/2025
கௌரவ அருண பனாகொட,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிட்டிப்பன, மாஹேனவத்த பிரதேசத்தில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியொன்று இதற்கு முன்னர் இருந்ததா என்பதையும்;
(ii) இன்றேல், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியொன்று அப் பிரதேசத்தில் உள்ளதா என்பதையும்;
(iii) அக்காணியானது எவரேனுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) இன்றேல், இதனை விற்பனை செய்வதற்கான ஏதேனும் ஏற்பாடு உள்ளதா என்பதையும்;
(v) அக்காணி விற்பனை செய்யப்பட்டிருப்பின், விற்பனை செய்யப்பட்ட மொத்தப் பணத்தொகை யாதென்பதையும்;
(vi) மேற்படி காணியின் பர்சஸ் ஒன்றின் பெறுமதி யாதென்பதையும்;
(vii) அரசின் நடவடிக்கைகளுக்கு காணிகள் தேவையாக இருக்கும் நிலையில், அக்காணியை ஒரு வெளித் தரப்புக்கு விற்பனை செய்வதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(viii) அக்காணியை மீண்டும் அரசாங்கத்துக்கு சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-01
கேட்டவர்
கௌரவ அருண பனாகொட, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks