E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0423/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.

    1. 423/2025

      கௌரவ டி.கே. ஜயசுந்தர,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையின் தேயிலைக் கைத்தொழிற் துறை 2010ஆம் ஆண்டு தொடக்கம் வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) தேயிலை மீள் செய்கைக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட 'ஸ்டார்' கருத்திட்டத்திற்கு நிதி வழங்கிய நிறுவனம் யாதென்பதையும்;

      (iii) வழங்கப்பட்ட மொத்தப் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

      (iv) அது கடனாகவா, இன்றேல், நன்கொடையாகவா வழங்கப்பட்டது என்பதையும்;

      (v) கடனாக இருப்பின், வருடாந்த வட்டி வீதம் யாதென்பதையும்;

      (vi) மேற்படி கடன் தொகையைச் செலுத்தி முடிக்கும் வருடம் யாதென்பதையும்;

      அவர் தொிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் நிருவாகக் கட்டமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆட்கள் யாவர் என்பதையும்;

      (ii) அதனூடாக தேயிலை மீள் செய்கை மேற்கொண்டுள்ள காணியின் அளவு, ஒவ்வொரு தேயிலைப் பரிசோதகர் பிரிவுக்கமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) கருத்திட்டத்தின் கீழ், தேயிலை மீள் செய்கை மேற்கொள்ளும் ஒரு ஏக்கர் காணிக்குச் செலுத்தப்பட்ட பணத்தொகை மற்றும் நிருவாகச் செலவு களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் தொிவிப்பாரா?

      (இ) (i) இன்றளவில் மேற்படி கருத்திட்டத்தை நிறைவு செய்திருப்பின், அதனை நிறைவு செய்த திகதி யாதென்பதையும்;

      (ii) செய்கையாளர்களுக்கு நிலுவைப் பணம் செலுத்த வேண்டியிருப்பின், அது ஒவ்வொரு தேயிலைப் பரிசோதகர் பிரிவுக்கமைவாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி கருத்திட்டத்தின் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;

      அவர் மேலும் தொிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-22

கேட்டவர்

கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks