E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0428/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

    1. 428/2025

      கௌரவ இம்ரான் மகரூப்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளுக்கு 'ஏ' தரம் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) இருப்பினும், 'ஏ' தரத்திற்கு ஏற்றவாறு பௌதீக வளங்கள் இற்றைவரையில் இவ்வைத்தியசாலைகளுக்குப் வழங்கப்படவில்லை என்பதையும்;

      (iii) மேற்படி வைத்தியசாலைகளுக்கு போதிய ஆளணி வழங்கப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி வைத்தியசாலைகளுக்குத் தேவையான பெளதீக வளங்களை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;

      (ii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் தற்போது கடமையாற்றிவரும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை;

      (iii) மேற்படி வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

      (iv) கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவராமைக்கான காரணங்கள் யாவை;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-08

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks