E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0452/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.

    1. 452/2025

      கௌரவ ரீ.கே. ஜயசுந்தர,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கிங் கங்கை பெருக்கெடுப்பதன் காரணமாக காலி மாவட்ட மக்களின் வாழ்வியலுக்கும் உடமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) 2000 ஆம் ஆண்டின் பின்னர் கிங் கங்கையின் பெருக்கெடுப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது வேறு நோக்கத்தைச் செயல்படுத்துவதற்கான உத்தேச கருத்திட்டங்கள் தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி அறிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி அறிக்கைகளைத் தயாரித்த நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (v) மேற்படி கருத்திட்ட அறிக்கைகள் / சாத்தியவள ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;

      (vi) அதற்கான நிதியைப் பெற்றுக்கொண்ட மூலங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கிங் கங்கையின் பெருக்கெடுப்பைக் கட்டுப்படுத்துவதற்காக கருத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ் ஒவ்வொரு கருத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, முடிவுற்ற ஆண்டு, ஒதுக்கப்பட்ட தொகை, செலவிட்ட தொகை, செயற்படுத்திய நிறுவனம் மற்றும் பெறப்பட்ட தீர்வுகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-01

கேட்டவர்

கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks