பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
452/2025
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிங் கங்கை பெருக்கெடுப்பதன் காரணமாக காலி மாவட்ட மக்களின் வாழ்வியலுக்கும் உடமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) 2000 ஆம் ஆண்டின் பின்னர் கிங் கங்கையின் பெருக்கெடுப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது வேறு நோக்கத்தைச் செயல்படுத்துவதற்கான உத்தேச கருத்திட்டங்கள் தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி அறிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி அறிக்கைகளைத் தயாரித்த நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(v) மேற்படி கருத்திட்ட அறிக்கைகள் / சாத்தியவள ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;
(vi) அதற்கான நிதியைப் பெற்றுக்கொண்ட மூலங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கிங் கங்கையின் பெருக்கெடுப்பைக் கட்டுப்படுத்துவதற்காக கருத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், அவ் ஒவ்வொரு கருத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, முடிவுற்ற ஆண்டு, ஒதுக்கப்பட்ட தொகை, செலவிட்ட தொகை, செயற்படுத்திய நிறுவனம் மற்றும் பெறப்பட்ட தீர்வுகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-01
கேட்டவர்
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks