E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0489/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, பா.உ.

    1. 489/2025

      கௌரவ (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2024 ஆம் ஆண்டு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் இரத்தினக்கல் சுரங்க அகழ்வு மற்றும் பிரித்தெடுக்கும் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மொனராகலை மாவட்டத்தில், வெள்ளவாய பிரதே​ச செயலாளர் பிரிவில் இரத்தினக்கல் சுரங்க அகழ்வு மற்றும் பிரித்தெடுக்கும் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) மேற்படி உரிமப் பத்திரங்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விதப்புரைகளுக்கு அமைவாக வழங்கப்படுகின்றனவா என்பதையும்;

      (iv) சுரங்க அகழ்வுப் பணிகளில் நிலவும் முறையற்ற தன்மை காரணமாக ஏற்படும் சுற்றாடல் பாதிப்பைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-04

கேட்டவர்

கௌரவ (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks