E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0490/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.

    1. 490/2025

      கௌரவ சுனில் ரத்னசிரி,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) "பொலன்னறுவை சிட்டி சென்டர்" இல் உள்ள மொத்தக் கடை அறைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அவற்றில் இதுவரை குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கடை அறைகளின் எண்ணிக்கை யாதென்பதயும்;

      (iii) "பொலன்னறுவை சிட்டி சென்டர்" கட்டிடத்தை குத்தகைக்கு வழங்குதல் மற்றும் அதிலுள்ள கடை அறைகளை பகிர்ந்தளித்தல் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாவை என்பதையும்;

      (iv) தற்போது மேற்படி தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (v) மேற்படி கடை அறைகளை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பொலன்னறுவை மாநகர சபைக்கு நட்டம் ஏற்பட்டிருப்பின், மேற்படி நட்டம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-05

கேட்டவர்

கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks