E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0493/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பத்மசிரி பண்டார, பா.உ.

    1. 493/2025

      கௌரவ பத்மசிறி பண்டார,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) சுதேச மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) இன்றளவில் சுதேச ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஆயுர்வேத மருத்துவர்களின் பற்றாக்குறை காணப்படுவதை அறிவாரா என்பதையும்;

      (iv) அவ்வாறாயின், அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மின்னேரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவ அலகொன்று இயங்குவதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி அலகை நிர்மாணிக்கும் ஒப்பந்த வேலையை மேற்கொண்டது யாரென்பதையும்;

      (iii) மேற்படி ஒப்பந்தத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதை அறிவாரா என்பதையும்;

      (iv) அவ்வாறாயின், அது பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

      (v) மேற்படி விசாரணையின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-17

கேட்டவர்

கௌரவ பத்மசிரி பண்டார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks