E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0495/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.

    1. 495/2025

      கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மிகிந்தலை கமநல சேவைகள் ஆளுகைப் பிரதேசத்தில், வரையறுக்கப்பட்ட ஜனதா லங்கா மிளகாய் சந்தைப்படுத்தல் கம்பனி நிறுவப்பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;

      (ii) 2001 ஆம் ஆண்டில் மிகிந்தலை கமநல சேவைகள் வங்கியினால் மேற்படி கம்பனிக்கு ரூ.1,275,000/- கடன் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      ‍(iii) ஆமெனில், அக்கடன் தொகை வழங்கப்பட்ட அடிப்படை யாதென்பதையும்;

      (iv) மேற்படி கடன் தொகை மீள அறவிடப்படுமா என்பதையும்;

      (v) ஆமெனில், அறவிடப்படும் அடிப்படை யாதென்பதையும்;

      (vi) மேற்படி கடன்தொகைக்காக அறவிடப்பட வேண்டிய ரூ. 1,975,233/- வட்டித் தொகையை அறவிடப்படாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-18

கேட்டவர்

கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks