பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
510/2025
கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சணச அபிவிருத்தி வங்கி, இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குறுத்தலுக்கு உட்பட்டதா;
(ii) சணச அபிவிருத்தி வங்கி மூலம் ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் களுக்கு "உத்தமாசார" என்ற பெயரில் கடன் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா;
(iii) அதன் கீழ் இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தக் கடன் தொகை யாது;
(iv) 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை கடன் வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தக் கடன் தொகை யாது;
(v) கடன் வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படுகின்ற ஓய்வூதிய சம்பள வீதம் யாது;
(vi) கடனை மீளச் செலுத்துவதற்கான குறைந்தபட்ச மற்றும் உச்சளவான காலஎல்லை யாது;
என்பதை அவர் தொிவிப்பாரா?
(ஆ) (i) கொவிட்-19 தொற்றுக் காலத்தில் கடனை அறவிட்டுக் கொள்ளும் காலஎல்லை நீடிக்கப்பட்டதன் மூலம் கடன் தொகையை விடவும் கூடுதலான தொகையை வட்டியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;
(ii) மேற்படி கால நீடிப்பு வங்கியின் தற்றுணிவின் போில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;
(iii) வங்கியின் தற்றுணிவின் போில் அவ்வாறு நீடிப்புச் செய்யப்பட முடியுமா;
(iv) அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்களுக்கு நியாயம் நிலைநாட்டப்படுமா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-17
கேட்டவர்
கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks