பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
576/2025
கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பரீட்சைகளை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் தனியார் வகுப்புகள் தொடர்பான ஒழுங்குறுத்தல்கள் காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி தனியார் வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் கல்வித் தகைமைகள் பற்றி அறிந்துள்ளாரா என்பதையும்;
(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(v) இன்றளவில் பாடசாலை நாட்களில் மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 2.00 மணி வரை க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பரீட்சைகளை இலக்காகக் கொண்டு தனியார் வகுப்புகள் நடாத்தப்படுகின்றமையை அறிவாரா என்பதையும்;
(vi) மேற்படி தனியார் வகுப்புகளை நடாத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(vii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(viii) மேலே (v) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தனியார் வகுப்புகள் நடாத்தப் படுகின்றமையால் அரசாங்கப் பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதகமான தாக்கம் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-08
கேட்டவர்
கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-04-08
பதில் அளித்தார்
கௌரவ ஹரினி அமரசூரிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks