E   |   සි   |  

 திகதி: 2025-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0902/ 2025 - கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 902/2025
      கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையில் விலங்குகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட திகதி யாது என்பதையும்;
      (ii) மேற்படி கணக்கெடுப்புக்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
      (iii) அக்கணக்கெடுப்பை மேற்கொண்டதன் நோக்கங்கள் யாவை என்பதையும்;
      (iv) அந்நோக்கங்களை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      (v) இன்றளவில் அக்கணக்கெடுப்புடன் தொடர்புடைய முன்னேற்றங்கள் யாவை என்பதையும்;
      (vi) அக்கணக்கெடுப்புக்கு அமைவாக மந்திகள், குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்படி விலங்குகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (ii) விலங்குகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாத கிராம அலுவலர் பிரிவுகள் யாவையென்பதையும்;
      (iii) அக்கிராம அலுவலர் பிரிவுகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-25

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks