E   |   සි   |  

 திகதி: 2025-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0978/ 2025 - கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 978/2025
      கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2024.07.07ஆந் திகதி பருத்தித்துறையிலிருந்து (வெற்றிலைக்கேணிக் கடல்) ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்ற எம்.எப். முஸ்தகீன், என்.குணபாலசிங்கம், ஏ.ராதா கிருஷ்ணன் மற்றும் பிரேமசிறி ஆகிய மீனவர்கள் 194 நாட்களுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் என்பதை அறிவாரா;
      (ii) மேற்படி மீனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதா;
      (iii) ஆமெனில், மேற்படி நட்ட ஈடு தொடர்பிலான விபரங்கள் யாவை;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-23

கேட்டவர்

கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks