E   |   සි   |  

 திகதி: 2025-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1123/ 2025 - கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1123/2025
      கௌரவ ரவீந்திர பண்டார,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) பதவியை கைவிட்டுச் சென்றுள்ள இலங்கை விமானப் படையைச் சோ்ந்த வீரர்கள்/அதிகாரிகளின் எண்ணிக்கை யாது;
      (ii) அவர்களில் இலங்கை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் சரணடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
      (iii) அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
      (iv) அவர்களை இலங்கை விமானப் படையிலிருந்து நீக்குவதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) இலங்கை விமானப் படைக்கு C-130 விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிவாரா;
      (ii) தற்போது விமானப் படைக்கு சொந்தமாக உள்ள C-130 விமானங்களின் எண்ணிக்கை யாது;
      (iii) மேற்படி விமானங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் இறுதியாக எக்காலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன;
      (iv) புதிய C-130 விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதன் நோக்கம் யாது;
      (v) மேற்படி புதிய C-130 விமானம் ஒரு அன்பளிப்பா; இன்றேல், புதிய கொள்வனவா;
      (vi) அதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்த்துள்ள பணிகள் இதுவரைக் காலம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை யாது;
      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-25

கேட்டவர்

கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks