E   |   සි   |  

 திகதி: 2025-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1179/ 2025 - கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1179/2025
      கௌரவ சிவஞானம் சிறீதரன்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) கிளிநொச்சி மாவட்டத்தில் —
      (i) இயங்குகின்ற தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் தரப்படுத்தலின் அடிப்படையில் இயங்குகின்றனவா என்பதையும்;
      (ii) தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களின் எண்ணிக்கை தரப்படுத்தலின் அடிப்படையில் வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
      (iii) நிரந்தர காணி மற்றும் கட்டிட வசதிகளோடு / வசதிகளின்றி இயங்கும் தபாலகங்கள், உப தபாலகங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
      (iv) மாவட்டத்தில் நிரந்தர கட்டிடங்களின்றி இயங்கும் உப தபாலகங்களுக்கு நிரந்தர கட்டிடங்கள் வழங்கப்படும் காலப்பகுதி யாதென்பதையும்;
      (v) கிளிநொச்சி, பரந்தன், பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய தபாலகங்களில் நவீன வசதிகள் மற்றும் கணினி வசதிகள் காணப்படுகின்றனவா என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) (i) பாரதிபுரம், புன்னைநீராவி மற்றும் பள்ளிக்குடா ஆகிய பிதேசங்களில் உப தபாலகங்கள் நிறுவப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
      (ii) ஆமெனில், 2016.09.05 ஆம் திகதிய எனது கடிதத்தின் பிரகாரம் அமைச்சரின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலரால் தபால்மா அதிபருக்கு அனுப்பப்பட்ட 2016.09.09 ஆம் திகதிய PPS&MR/HR/09-182 ஆம் இலக்க கடிதம் தொடர்பாக இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks