பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1307/2025
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பச்சைத் தேயிலைக் கொழுந்து உற்பத்தி குறைந்துள்ளமை தேயிலைக் கைத்தொழில் சார்ந்த பிரதானமானதொரு பிரச்சனை என்பதையும்;
(ii) நீண்ட காலமாக தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் தேயிலைக் காணிகளின் மண் வளமற்றுப் போயுள்ளமை மற்றும் மண்ணில் அமிலத்தன்மை அதிகரித்துள்ளமை இதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதென்பதையும்;
(iii) மூங்கிலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற உயிர் கரியை (Bio Charcoal) பயன்படுத்துவதன் மூலம் தேயிலைக் காணிகளை நீண்ட காலத்துக்கு வளப்படுத்த முடியுமென தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் பல்கலைக்கழகங்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
(iv) பயன்படுத்தும் உரத்தின் அளவுக்கு நிகராக உயிர் கரி பயன்பாட்டின் மூலம், அகத்துறிஞ்சக்கூடிய உரத்தின் அளவில் துரித வளர்ச்சி ஏற்படுவதால் தேவையற்ற முறையில் உரம் இடுவதை கட்டுப்படுத்த முடியுமென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?
(ஆ) (i) ஆமெனில், அது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை யாதென்பதையும்;
(ii) இந்த விடயம் தொடர்பாக தேயிலைக் கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களை இணைத்துக்கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-09
கேட்டவர்
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks