E   |   සි   |  

 திகதி: 2025-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1314/ 2025 - கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1314/2025
      கௌரவ கே. காதர் மஸ்தான்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள 102 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், நிரந்தர கிராம உத்தியோகத்தர் அலுவலகமொன்றைக் கொண்டிராத கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் தற்காலிக கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களைக் கொண்டு இயங்கும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;
      (ii) வவுனியா மாவட்டத்தில் காணப்படும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் தற்போது புனரமைக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்ற மற்றும் மலசலகூட வசதி, நீர் வசதி மற்றும் மின்சார வசதி காணப்படாத மற்றும் இன்றளவில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;
      (iii) மேற்படி பிரச்சினைகள் காரணமாக குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கு உரிய முறையில் தமது சேவைகளை வழங்க முடியாதுள்ளமையை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-08

கேட்டவர்

கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks