E   |   සි   |  

 திகதி: 2025-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1321/ 2025 - கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1321/2025
      கௌரவ சுகத் வசந்த த சில்வா,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயிலும் விசேட பாடசாலைகளின் எண்ணிக்கை;
      (ii) அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அவர்களது மாற்றுத்திறனின் அடிப்படையில் வெவ்வேறாக;
      (iii) மேற்படி விசேட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை;
      (iv) அவற்றில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களின் எண்ணிக்கை;
      (v) இலங்கையில் உள்ள விசேட கல்வி அலகுகளின் எண்ணிக்கை;
      (vi) அவற்றில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அவர்களது மாற்றுத்திறனின் அடிப்படையில் வெவ்வேறாக;
      (vii) அவ்வலகுகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை;
      (viii) அவற்றில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களின் எண்ணிக்கை;
      எத்தனை என்பதை அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) (i) விசேட கல்விக்கான ஆசிரிய நியமனம் பெற்று வேறு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எத்தனை;
      (ii) மேற்படி ஆசிரியர்களை விசேட கல்வித் துறையினுள்ளேயே சேவையில் ஈடுபடுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
      (iii) விசேட கல்வி ஆசிரியர்களுக்காக பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றதா;
      (iv) அவற்றை நடத்தும் நிறுவனங்கள் யாவை;
      (v) விசேட கல்விக்குரியதான சட்டங்களை இற்றைப்படுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் யாவை;
      (vi) முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தில் விசேட கல்வி தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் யாவை;
      என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-09

கேட்டவர்

கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks