E   |   සි   |  

 திகதி: 2025-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1326/ 2025 - கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1326/2025
      கௌரவ சுஜீவ திசாநாயக்க,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை யாதென்பதையும்;
      (ii) மேற்படி சிறைச்சாலை ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (iii) இன்றளவில் இலங்கையில் காணப்படும் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (iv) அச்சிறைச்சாலைகள் யாவையென்பதையும்;
      (v) இன்றளவில் அவ்வொவ்வொரு சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கையானது, ஆண், பெண் அடிப்படையில் வெவ்வேறாக யாதென்பதையும்;
      (vi) சிறைச்சாலையொன்றில் கைதி ஒருவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடப்பரப்பு சதுர அடி அளவில் எவ்வளவென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய சிறைச்சாலை யாதென்பதையும்;
      (ii) அங்கு தடுத்து வைக்க இயலுமான ஆகக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (iii) 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேற்படி சிறைச்சாலையில் நாளொன்றில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் சராசரி எண்ணிக்கை யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-21

கேட்டவர்

கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks