E   |   සි   |  

 திகதி: 2025-11-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

1404/ 2025 - கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1404/2025
      கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) ப்ரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்;
      (ii) தற்போது மேற்படி நீர்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
      (iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்படி மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக நட்டஈடு வழங்கப்படவுள்ள நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (ii) அவர்களுள் இதுவரை முழுமையான நட்டஈட்டுத் தொகை செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் அத்தகைய ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்பட்ட நட்டஈட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (iii) மேலும் நட்டஈடு வழங்கப்பட வேண்டிய எஞ்சியவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (iv) மேற்படி ஒவ்வொரு நபரின் பெயர் மற்றும் செலுத்த வேண்டியுள்ள நட்டஈட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (v) அவர்களுக்கான நட்டஈடு செலுத்தி முடிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-11

கேட்டவர்

கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks