பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-11-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

1477/ 2025 - கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1477/2025
      கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையின் சகல உள்ளூராட்சி மன்றங்களும் வீதிகளுக்கு ஒளியூட்டும் தெரு விளக்குகளைப் பயன்படுத்துகின்றன என்பதையும்;
      (ii) இலங்கை மின்சார சபை இதுவரை அதற்கு எவ்விதக் கட்டணங்களையும் அறவிடவில்லை என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) (i) வீதிகளுக்கு ஒளியூட்டும் தெரு விளக்குகளைப் பயன்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்களிடம் கட்டணத்தை அறவிடுவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதா என்பதையும்;
      (ii) ஆமெனில், அது தொடர்பான அறவிடல் வழிமுறை யாதென்பதையும்;
      (iii) ​​மேற்படி அறவிடலின் காரணமாக குறைந்த வருமானத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் சிரமத்திற்குள்ளாவதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
      (iv) ஆமெனில், அதற்குத் தீர்வு வழங்கப்படுமா என்பதையும்;
      (v) ஆமெனில், அந்தத் தீர்வு யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-12

கேட்டவர்

கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks