E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2806/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2806/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,—  சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘இரத்தினக்கல் மற்றும் ஆபரண’ கண்காட்சி,

                 (i)      நடாத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;

                 (ii)     அதற்கென செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

                 (iii)    நடாத்தப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;

      (iv) நடாத்திய நிறுவனங்கள் அல்லது நபர்கள் யாவர் என்பதையும்;

      (v) அதற்கென பணத்தை செலவிட்ட விதம் யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேற்கூறிய கண்காட்சி நடாத்தப்பட்டதால் பெற்ற இலாபம் அல்லது நட்டம்  யாதென்பதையும்;

      (ii) குறித்த கண்காட்சியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதையும்;

      (iii) அவ்வாறாயின், அது தொடர்பில் இன்றளவில் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-12

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks