E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2871/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2871/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,—  மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்கள்,

                 (i)     இறக்குமதி செய்யப்பட்ட நாடுகள் யாவை என்பதையும்;

                 (ii)     உற்பத்தி செய்யப்பட்ட நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (iii) உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டுகள் யாவையென்பதையும்;

      (iv) இவற்றுக்காக வழங்கப்பட்டுள்ள உத்தரவாத கால வரையறை (Warranty period) யாதென்பதையும்;

      (v) மேற்படி இயந்திரங்களுக்காக வழங்கப்பட்டுள்ள உத்தரவாதச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்தமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் உயர்ந்தபட்ச மின்சக்தியின் அளவு எத்தனை மெகாவோட்கள் என்பதையும்;

      (iii) மேற்படி உயர்ந்தபட்ச மின்சக்தி தேசிய மின்சக்தி கட்டமைப்புக்கு வழங்கப்படும் திகதி யாதென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2013-07-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks