E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2978/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

    1. 2978/ ’12

      கெளரவ அகில விராஜ் காரியவசம்,— சிவில் விமான சேவைகள்  அமைச்சரைக்  கேட்பதற்கு,—

      (அ)    (i)     சிவில் விமான சேவைகள் அதிகார சபை தாபிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை மேற்படி நிறுவனத்துக்கு நிரந்தரமான கட்டடமொன்று இல்லையென்பதையும்;

      (ii) மேற்படி அதிகாரசபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் அரச நிதி முறைசாரா விதத்திலும் கவனயீனமாகவும் செலவு செய்யப்பட்டுள்ளதென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) கடந்த 10 வருடங்களாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை பேணிவரப்படுகின்ற கட்டடத்துக்கு செலுத்தப்பட்டுள்ள வாடகைத் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) நிலத்துக்கான வாடகையாக பெருமளவிலான குத்தகைத் தொகையை செலுத்தும் மேற்படி அதிகாரசபைக்காக நிரந்தரமான கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iii) மேற்படி நிறுவனத்தின் நிதியை கவனயீனமாகக் கையாண்ட அதிகாரிக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-22

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-05-22

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ கீதாஞ்ஜன குணவர்தன, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks