E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3079/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 3079/ ’12

      கெளரவ புத்திக பதிரண,— சுதேச மருத்துவத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      தற்போதுள்ள தொழிலற்ற ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

                 (ii)     மேற்கத்திய மருத்துவப் பட்டதாரிகளுக்காக (MBBS) கற்றுருப் பயிற்சிக் காலத்தின் பின்னர் திறமைப் பட்டியல் அடிப்படையில் அரச சேவையில் சேர்த்துக்கொள்ளும் முறையியலொன்று இருப்பினும் ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகளுக்கு (BAMS) அவ்வாறான தேசியக் கொள்கையொன்று இல்லாமை பெரும் அநீதியாகுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iii) அவ்வாறெனின், அத்தகைய தேசிய கொள்கையொன்றை துரிதமாக தயாரித்து ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகளின் தொழில் பிரச்சினைக்கு முறை சார்ந்த தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-22

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுதேச மருத்தவத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-11-22

பதில் அளித்தார்

கௌரவ சாலிந்த திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks