E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4052/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

    1. 4052/ ’13

      கௌரவ அஜித் குமார,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

      (அ)    காலி, இமதுவை நகர அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு,

                 (i)     நிதி கிடைக்கும் மூலம் யாது என்பதையும்;

                 (ii)    மதிப்பிடப்பட்ட செலவினம் எவ்வளவு என்பதையும்;

      (iii) காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) காணிகளை சுவீகரிப்பதற்காக ஏற்புடையதாக்கிக் கொள்ளப்பட்ட, காணி கொள்ளல் சட்டத்தின் பிரிவுகள் யாவை என்பதையும்;

      (v) சுவீகரிக்கப்பட்டுள்ள அல்லது அவ்வாறு செய்யவுள்ள காணிகள் மற்றும் ஆதனங்களுக்கு நட்டஈடு செலுத்தப்படுமா என்பதையும்;

      (vi) தகர்த்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களுக்காக செலுத்தப்படுகின்ற நட்டஈடு தொடர்பில் குறித்த வியாபாரிகள் அறிவுறுத்தப் படுவார்களா என்பதையும்;

      (vii) அகற்றப்படுகின்ற வியாபார நிலையங்களுக்குப் பதிலாக மாற்று வியாபார நிலையங்கள் வழங்கப்படுமா என்பதையும்;

      (viii) மாற்று வியாபார நிலையங்கள் வழங்கப்படுகின்ற பிரதேசம் யாது என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இமதுவை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விஸ்தரிக்கப்படுகின்ற காலி – அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இமதுவை நகர சந்திக்கு அண்மையிலுள்ள அகலம் எவ்வளவு என்பதையும்;

      (ii) இமதுவை நகரத்திற்கு வெளியே நிர்மாணிக்கப்படுகின்ற மாற்று வீதியின் அகலம் எவ்வளவு என்பதையும்;

      (iii) மாற்று வீதி மற்றும் நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக மீட்கப்பட்டுள்ள வயற்காணிகள் உரிய முறையியலின் கீழ் சுவீகரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) மேற்படி காணிகளுக்கு நட்டஈடு செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) இன்றேல், மேற்படி நட்டஈட்டைச் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாது என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-08

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-04-08

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks