E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4325/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

    1. 4325/ ’13

      கௌரவ அஜித் பி. பெரேரா,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மில்லனிய பிரதேச செயலாளர் பிரிவில் பாத்தகட, உடுவர, தெல்கொட ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் கற்குழிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

                 (ii)    அந்த கற்குழிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;

      (iii) அந்த ஒவ்வொரு நிறுவனத்தினாலும் முன்னெடுக்கப்படும் தொழில் முயற்சிகளின் இயல்புகள் யாவை;

      (iv) மேற்படி ஒவ்வொரு தொழில்முயற்சியையும் மேற்கொள்வதற்குத் தேவையான அங்கீகாரமும் உரிமப் பத்திரமும் பெறப்பட்டுள்ளதா;

      (v) ஆமெனில், அந்த ஒவ்வொரு உரிமப் பத்திரமும் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ள காலகட்டங்கள் யாவை

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசத்தில் காணப்படும் பாரதூரமான சுற்றாடல் மாசடைதல் தொடர்பாக அறியவந்துள்ளதா;

      (ii) ஆமெனில், அத்தகைய சுற்றாடல் மாசடையும் நிலைமைகளை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-25

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-04-25

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks