E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0034/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 34/ '15

       

      கெளரவ புத்திக பத்திறண,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2014 ஆம் ஆண்டில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்;

      (ii) மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட கம்பனி யாதென்பதையும்;

      (iii) மேற்படி நிறுவனத்துக்கு ஏற்புடைய புனரமைப்பு நடவடிக்கைகளை வழங்கும் போது கேள்விப்பத்திரம் கோரல் நடைபெற்றதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அந்நிறுவனம் சமர்ப்பித்திருந்த கேள்விப்பத்திரத்தின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

      (v) கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்திருந்த ஏனைய நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (vi) மேற்படி நிறுவனங்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி, இலக்கங்கள் உரித்தான நாடுகள் மற்றும் கேள்விப் பத்திரங்களின் பெறுமதி வெவ்வேறாக யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி நிறுவனத்துடன் சேர்ந்து செயலாற்றியதன் மூலம் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks