E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0049/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 49/ '15

       

      கௌரவ புத்திக பத்திறண,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மில்கோ கம்பனியின் பால் மா உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையும்;

      (ii) இதற்கமைய சந்தையில் ஹைலன்ட் பால் மா இல்லை என்பதையும்;

      (iii) இது நுகர்வோருக்கும், கம்பனிக்கும் பாரிய இழப்பாகும் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) 2010.01.10 ஆம் திகதி முதல் 2014.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மில்கோ கம்பனியின் பால் மா உற்பத்தி கிலோ கிராம்களில் வருடாந்த அடிப்படையில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

      (ii) 2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பால் மாவின் அளவு கிலோ கிராம்களில் எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மில்கோ கம்பனியின் பால் மா உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-06

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks