பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
56/ '15
கௌரவ புத்திக பத்திறண,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தம்புல்ல விசேட பொருளாதார நிலையத்திற்கு கொண்டுவரப்படுகின்ற மரக்கறிகளுக்காக நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதையும்;
(ii) கப்பம் வாங்குபவர்களும் இடைத்தரகர்களும் விவசாயிகளுக்கு மோசடிகள் புரிகின்றனரென்பதையும்;
(iii) அரசியல் பாதுகாப்பின் பேரில் கப்பம் வாங்குபவர்கள் இயங்கிவருகின்றனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி பொருளாதார நிலையத்தில் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாது;
(iii) நிலையத்தில் இயங்கிவருகின்ற கப்பம் வாங்குபவர்களை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா;
(iv) ஆமெனில், அது எவ்விதத்தில்;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டமைக்கான நோக்கங்களும் இலக்குகளும் யாவை;
(ii) இன்றளவில் அந்நோக்கங்களும் இலக்குகளும் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) (i) மேற்படி நிலையத்தில் உள்ள கடை அறைகளின் எண்ணிக்கை யாது;
(ii) அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களும் முகவரிகளும் யாவை;
(iii) மேற்படி உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் அறவிடுகின்ற வரித்தொகை எவ்வளவு;
(iv) இந்த கடை அறைகள் கீழ்வாடகைக்கு விடப்பட்டுள்ளனவென்பதை அறிவாரா;
(v) ஆமெனில், அது சட்டவிரோதமானதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
(vi) விவசாயிகள் அமைப்புக்களுக்கும் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்திற்கும் வழங்கப்பட்டிருந்த கடை அறைகள் இரண்டிலுமிருந்து அவர்கள் ஏன் அகற்றப்பட்டார்கள்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-09
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-12-09
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks